தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவரும் பயனடைய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 18 லட்சம் பேர் தற்போது பயனடைந்து வரும் நிலையில் மேல் முறையீடு செய்த 11.8 லட்சம் பேருக்கு விரைவில் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

அதனைப் போலவே மறுவாழ்வு முகாம்களில் உள்ள பெண்களுக்கும் இந்த திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த 19487 குடும்ப பெண்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.