சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் அவசர கால உதவி மருத்துவ மையங்களை அரசு அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அவசரத்திற்கு கூட மருந்து மாத்திரை கிடைக்காததால் பயணிகள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே நிலையங்களான சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற ரயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து அரசு தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் அவசர உதவி மருத்துவ மையத்தை அமைக்க உள்ளது. மாநிலத்தில் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.