மதுரை: மேலூர் மற்றும் தனியாமங்கலம் துணை மின் நிலைப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி மேலூர், தெற்கு தெரு, விநாயகபுரம், நாவினிப்பட்டி, திருவாதவூர், கீழையூர், கீழவளவு, கொங்கம்பட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், சருகுவலையப்பட்டி, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

அதே போல், கப்பலுார், தியாகராஜர் மில், எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், பி.ஆர்.சி காலனி, மகளிர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோ மொபைல், மேலஉரப்பனூர், மைக்குடி, உலகாணி, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், எச்.பி.எல், கப்பலுார் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக வருகின்ற 12ஆம் தேதி (திங்கள்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொறையாறு துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்சாரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது.