தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி, கலை முதுமணி என ஐந்து விருதுகள் என ஒவ்வொரு விருது வகையிலும் மூன்று விருதுகள் மாவட்டம் ஒன்றுக்கு 15 விருதுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் 55 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கு மாவட்ட கலை மன்ற விருதுக்கான விண்ணப்பங்கள் கலை பண்பாட்டு துறையால் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்று ஜூலை 15ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.