தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது ZEBRONICSநிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்து அறிவிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் பழைய ஆலந்தூர் சாலை, மகளிர் ஐடிஐ அருகிலுள்ள திரு.வி.க தொழிற்பேட்டை கிண்டியில்இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள ஸ்பெஷல் டிரைவ் தனியார் வேலை கண்காட்சியில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.