தமிழகத்தில் மருத்துவத் துறையில் அரசு சார்பாக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூளை, தண்டுவடம் போன்றவற்றை ஸ்கேன் செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனையில் 8.25 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ காப்பீடு மூலமாக இலவசமாகவே ஸ்கேன் செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார் .

மேலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1021 மருத்துவ காலிப்பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும் எனவும் 2242 செவிலியர் பணியிடங்கள் எம்ஆர்பி தேர்வு மூலமாக நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.