இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல என்பதையும் நிரூபிக்கும் விதமாக பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் கார் ஆட்டோ பேருந்து என தமிழகத்தின் தற்போது பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகிறார்கள். இது போன்ற பெண் ஓட்டுநர்களை தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் பெண் ஓட்டுநர்களுக்கு தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

அதாவது தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக கிட்டத்தட்ட 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .இந்த திட்டம் கூடிய விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அதிக அளவில் பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கான மானியம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது..