தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுடைய விலைவாசி உயர்ந்து வருவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி குறைவு குறித்து ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் ரேஷன் கடைகளில் காய்கறி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

இதனால் அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக கொள்முதல் மேற்கொள்ளலாம். அதே சமயம் பொருட்கள் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி விற்பனை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.