தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் குறைகளையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதி மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். செய்யூர்-பொலம்பாக்கம், செங்கல்பட்டு-கொளத்தூர், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், மதுராந்தகம்-மங்கலம், வண்டலூர்- குமிழி, திருப்போரூர்-திருநிலை உள்ளிட்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.