தமிழகத்தில் நான்கு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை, செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 1, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை வருவதால் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.