கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையும், 2ஆம் கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையும் பள்ளிகளைத் திறக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.