தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? எனவும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கொரோனா காலத்தால் நிறுத்தப்பட்ட பேருந்துகள் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை என்றும், போதுமான ஓட்டுநர், நடத்துநர் இல்லாத காரணத்திற்காகவே நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.