5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலையானது 10 ரூபாய் உயர்ந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ரூ.210 க்கு விற்கப்பட்டு வந்த பச்சை பால் இனி ரூ.220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இது இல்லத்தரசிகளை பாதிக்காது. இருப்பினும் வணிக ரீதியாக வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனைத்தொடர்ந்து ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை உயரும் என கூறப்படுகிறது. பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது