தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் தேவையான ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.