தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க்கிறது .இதில் டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்து முடித்து வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம். முகாமிற்கு வருகை புரிய உள்ளவர்கள் கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.