தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயத்தை விலை மட்டுமே வாங்கப்படும் என்று போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு இழந்த நிலையில் தற்போது அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.