மதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக அமைப்பு தேர்தலில் மதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்தே திருப்பூர் துரைசாமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஜுன் ராஜ் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் துறை வைகோவிற்கு எதிராகவும் மதிமுகவை திமுகவுடன் இணைக்கவும் திருப்பூர் துரைசாமி கூறி இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.