நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி இந்த உத்தரவு சில வாரங்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நண்பகல் 12:00 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்து இரவு 10 மணி வரை செயல்படும் என்பதால் தொடர் விடுமுறை காரணமாக இன்றைய தினம் மது பாட்டில்களை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.