தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூன் 8 மற்றும் 9 ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாளை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக நாளை 800 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.