அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் எஸ் முரளி என்கிற ரகுமாரன் (விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என பதிவிட்டுள்ளார்.