தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் தடையின்றி மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.