தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மட்டுமே அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றும் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.