தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அதன்படி நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.