தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும் அரசு கண்காணிக்கிறது என்று கூறினார். மேலும் மதுபான விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.