தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இந்த தேர்வு மூலமாக மாணவ சேர்க்கை நடைபெறுகின்றது.

TANCET, CEETA Pg  ஆகிய நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. மாணவர்கள்  https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் டான்செட் தேர்வு மார்ச் ஒன்பதாம் தேதியும், CEETA pg தேர்வு மார்ச் 10ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.