கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, கலைஞரின் எழுத்து சில நேரம் நமக்கு கண்ணீரை வரவழைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ரஜினி, கலைஞரின் எழுத்து அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.

சில சமயம் கலைஞரின் எழுத்தில் கோபம் இருக்கும். அது எதிராளியை சுட்டுவிடும். அவரின் பேச்சில் தெனாலிராமன் உடைய நகைச்சுவை இருக்கும். அரசியலைப் பொறுத்தவரையில் சாணக்கியனின் தந்திரமும் பாரதியின் கோபமும் இருக்கும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.