தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும் திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1366 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 19 பேர் மூச்சுத் திணறல் காரணமாக ஆக்சிஜன் படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.