தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது அரசு பள்ளி மாணவர்கள் தினந்தோறும் காலை உறுதிமொழி எடுக்கும்போது எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு இன்று அதாவது செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.