தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி நான்காம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரையும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் ஜனவரி பத்தாம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.