தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 13 இரண்டாவது சனிக்கிழமை, ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை மற்றும் போகி பண்டிகை விடுமுறை, ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 17 உழவர் திருநாள் விடுமுறையாகும்.. எனவே இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.