தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 33 பணியிடங்களுக்கு சுமார் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 13 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.