பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இன்றும் நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஐந்து மணிக்கு எலும்புகளில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் நெல்லை மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.