தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.