முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இம்மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.