தமிழகத்தில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ களுக்கும் நான் முதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்புகள் நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐடிஐ ஆகியவற்றுக்கு தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் படைப்பாற்றலையும் புத்தாக்க திறனையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான பிரத்தியேக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளங்கலை தொழில்கல்வியை முன்னெடுத்து தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய பல்கலைக்கழகங்களில் பிரத்தியேக பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.