திருத்தணி முருகன் கோயிலின் ஆடி கிருத்திகையையொட்டி நாளை மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 16 ஆம் தேதி குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் அந்தந்த மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது.