தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.