தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஐந்து முக்கிய நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

அதாவது சென்னை, ஓசூர், கோவை,திருச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிலம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது