தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன் காரணமாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவிப்பு என்ற தேர்வு நடைபெற உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.