புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.