விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை விழுப்புர மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ளார்.