நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் அமுத விஜயரங்கன், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயத், ஆட்சி மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன், ஊராட்சித் தலைவர்கள் வைதேகி ராசு, ஜீவா ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சசிகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதியவர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள், புதிய ரேஷன் கார்டு உட்பட 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இந்த முகாமில் வழங்கப்பட்டது.
மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more