நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில்  65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரது உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்று விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.