அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம் அருகே சென்றபோது வைக்கோல் கட்டுகள் மின்சார கம்பி மீது உரசியதாக தெரிகிறது.

இதனால் வைக்கோல் கட்டுகள் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வைகோலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் மற்றும் டிராக்டர் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.