நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் அமுத விஜயரங்கன், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயத், ஆட்சி மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன், ஊராட்சித் தலைவர்கள் வைதேகி ராசு, ஜீவா ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சசிகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதியவர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள், புதிய ரேஷன் கார்டு உட்பட 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இந்த முகாமில் வழங்கப்பட்டது.
மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more