2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாநில அரசு பேருந்துகளிலும் ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும். பத்து ரூபாய் நாணயம் தொடர்பான போஸ்டர்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்ட வேண்டும். அதனை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பத்து ரூபாய் நாணயத்தை பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், 10 மற்றும் 20 நாணயங்களை வாங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.