தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் ஆகியோரை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம் எனவும் அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறக் கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.