திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த முடியாது எனவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி மற்றொரு பிரிவினர் மாசி மாத காப்பு கட்டு தேர் திருவிழாவை தனியாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜங்கமராஜபுரம் , கீழ அன்பில், மங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மற்றும்கோவில்கள் உள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.