தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திருத்தங்கல் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.