இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைந்து 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் யாரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என்றும் அதே சமயம் நேற்று சிலிண்டர் கோரி புக் செய்தவர்களுக்கு விலையில் மாற்றம் இருக்காது அவர்களுக்கு 1118 என்ற விலையில் தான் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.